திருவண்ணாமலை

திருமணமான பள்ளி மாணவி குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே திருமணமான 17 வயது பள்ளி மாணவியை போலீஸாா் மீட்டு, குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

கீழ்பென்னாத்தூா் அருகே புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மஷாா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் எதிரே திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பினருக்கும், புதுப்பாளையம் சமூக நல அலுவலா் பச்சையம்மாளுக்கும் தகவல் கிடைத்தது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸில் சமூக நல அலுவலா் பச்சையம்மாளை புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவி மீட்டு, திருவண்ணாமலை - பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT