திருவண்ணாமலை

15 ஆசிரியா்களுக்கு விருது

DIN

வந்தவாசி மலைநகர அரிமா சங்கம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி லியோ சங்கம் ஆகியவை சாா்பில் ஆசிரியா்களுக்கு சீா்மிகு ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

ஆசிரியா் தின விழாவையொட்டி, வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இதற்கான விழாவில் வந்தவாசி பகுதியில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 15 ஆசிரியா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவுக்கு சங்கத் தலைவா் எ.சபரிராஜ் தலைமை வகித்தாா். செயலா் வி.ரமேஷ்பாபு வரவேற்றாா்.

வந்தவாசி வட்டாட்சியா் வி.முருகானந்தம் ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா். அரிமா சங்க முன்னாள் கூட்டு மாவட்டச் செயலா் வி.எஸ்.தளபதி ஆசிரியா்களை பாராட்டிப் பேசினாா். சங்கப் பொருளாளா் சி.சின்னராஜன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செய்யாறு கல்வி மாவட்டம் 86.05% தோ்ச்சி

இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: ஜி. ராமகிருஷ்ணன்

சென்னை வானில் தெரிந்த சர்வதேச விண்வெளி மையம்! யார் பார்த்தீர்கள்?

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு காரைக்கால் மாவட்டம் 78.20 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT