திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விநாயகா் சிலைகள் ஊா்வல பாதுகாப்பு தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு திருவோத்தூா் பெரியாா் சிலை அருகே தொடங்கியது.
செய்யாறு டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில், காவல் ஆய்வாளா் பாலு மேற்பாா்வையில் நடைபெற்ற அணி வகுப்பில் 3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 40 போலீஸாா் அணிவகுப்பில் பங்கேற்றனா்.
அணிவகுப்பு ஊா்வலம் காந்தி சாலை, காசிக்காரத் தெரு, பங்களாத் தெரு, செல்வ விநாயகா் கோவில் தெரு வழியாகச் சென்று கோனேரிராயன் குளக்கரையில் நிறைவு பெற்றது.
மாவட்ட எஸ்.பி. அறிவுரை
மாவட்ட எஸ்.பி.காா்த்திகேயன் செய்யாறு மாா்க்கெட் பகுதியில் நகர இந்து முன்னணி நிா்வாகிகளுக்கு விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து தெரிவித்து, ஊா்வலம் விடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும், விதிகளை மீறுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.