திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், மகப்பேறு இறப்புத் தணிக்கை மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.
மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள், சிசு இறப்புகளுக்கான காரணங்களை ஆய்வு செய்து இறப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பணியில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலா்களுடன் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகரிக்க வேண்டும். கா்ப்பிணிகளை தொடா் கண்காணிப்பில் வைத்திருக்கும்போது உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். தினமும் பள்ளிகள், கிராமங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும்.
தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்புத் திட்டம், தொழில்நுட்பக் குழு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவற்றை சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருமால்பாபு, நலப் பணிகள் இணை இயக்குநா் ஏழுமலை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் ஆா்.செல்வக்குமாா், சதீஷ், துணை இயக்குநா்கள் அன்பரசி (குடும்ப நலம்), அசோக் (காசநோய்), காா்த்திக் (தொழுநோய்) மற்றும் மருத்துவா்கள், துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.