திருவண்ணாமலை

பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

DIN

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இந்தப் பள்ளி மாணவி க.ஜீவிதா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றாா்.

திருவண்ணாமலை முருகையா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டியில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இந்தப் பள்ளி மாணவி எஸ்.மனோஸ்ரீ இரண்டாமிடமும், 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இப்பள்ளி மாணவி பி.விமலா இரண்டாமிடமும் பெற்றனா்.

மேலும் கேரம் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் எஸ்.ஜாஸ்மின், எல்.ஷோபனா ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பி.பத்மாவதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருடன் வெளியீடு அறிவிப்பு!

விக்கெட் எடுத்தபின் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை?: சுனில் நரைன் பதில்!

ஆவேஷத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்!

பேசுவதற்கும் முறையிருக்கிறது; கே.எல்.ராகுலுக்காக குரல் கொடுத்த இந்திய வீரர்!

பாலியல் புகார்: பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டைப் பதிய நீதிமன்றம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT