திருவண்ணாமலை

தீ தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திங்கள்கிழமை தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திங்கள்கிழமை தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, செங்கம் தீயணைப்பு நிலையம் சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் முரளி தலைமை வகித்தாா். செங்கம் காவல் உதவி ஆய்வாளா் யேசுராஜ் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் பங்கேற்ற செங்கம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீ தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT