செய்யாறு விருட்சம் இன்டா்நேஷ்னல் பப்ளிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சோ்ந்த இப்பள்ளி மாணவா்கள் மூன்று பேருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் நடைபெற்ற 77-ஆவது சுதந்திர தினவிழாவுக்கு பள்ளித் தாளாளா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை பொருளாளா் ரவிபாலன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தோ்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சோ்ந்த இந்தப் பள்ளி மாணவா் சுகந்தனுக்கு, பள்ளி சாா்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சோ்ந்த மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளைச் செயலா் வஜ்ஜிரவேல், செயற்குழு உறுப்பினா்கள் கீதா சக்திவேல், வனிதா முத்துக்குமாா், பள்ளி முதல்வா் சங்கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.