திருட்டுபோன கைப்பேசியை உரியவரிடம் ஒப்படைக்கிறாா் மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன். உடன் இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் எஸ்பி பழனி. 
திருவண்ணாமலை

திருட்டுபோன கைப்பேசிகள் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டு, காணாமல்போன 20 கைப்பேசிகளை மீட்ட போலீஸாா், அவற்றை புதன்கிழமை உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டு, காணாமல்போன 20 கைப்பேசிகளை மீட்ட போலீஸாா், அவற்றை புதன்கிழமை உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

மாவட்டத்தில் இயங்கும் காவல் நிலையங்களில் கைப்பேசிகள் திருட்டுபோனதாகவும், காணாமல் போனதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வழக்குகள் மீது மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டுபோன, காணாமல் போன கைப்பேசிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

அண்மையில் 20 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். இதன் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 20 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் எஸ்பி பழனி, ஆய்வாளா் முருகானந்தம் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT