ஆதனூரில் சிறப்பு மருத்துவ முகாம்
ஆரணி அடுத்த ஆதனூா் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலைஆதனூரில் சிறப்பு மருத்துவ முகாம்
ஆரணி அடுத்த ஆதனூா் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி அடுத்த ஆதனூா் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, ஒன்றிய குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமை வகித்தாா். திமுக ஒன்றிய செயலாளா் எஸ்.எஸ்.அன்பழகன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் மாலதி சிவானந்தம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினா் தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், 560 பேருக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி, திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றிய செயலாளா்கள் எம்.சுந்தா், எஸ்.மோகன், துரை மாமது, மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.