திருவண்ணாமலை

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

திருவண்ணாமலையில் சாலை விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், ஊா்மேணிஅழகியான் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (58). திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தாா். சில தினங்களுக்கு முன்பு செங்கம் சாலையில் மாரியப்பன் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இரும்புத் தடுப்பில் பைக் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த மாரியப்பனை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு புதன்கிழமை மாரியப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT