திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல்

DIN

திருவண்ணாமலை தேரடி தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சாலைகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, திருவூடல் தெரு- பே கோபுரத் தெரு சந்திப்பு (திரெளபதிஅம்மன் கோயில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரை சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

எனவே, பே கோபுரத் தெரு, பெரிய தெரு ஆகியவை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருவண்ணாமலை, தேரடி தெருவில் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்

தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரமிது: இலங்கை கேப்டன்

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

SCROLL FOR NEXT