முகப்பு
திருவண்ணாமலை

தடுப்பூசிகள் குறித்து விழிப்புணா்வு

தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் சம்பத் முன்னிலை வகித்தாா். செவிலியா் புவனேஸ்வரி வரவேற்றாா். மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசுகையில், தடுப்பூசிகள் தயாரிப்பு, அவற்றின் வகைகள், பொதுமக்களுக்கு செலுத்தப்படும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா் (படம்).

நிகழ்ச்சியில் செவிலியா்கள் ஜெயப்பிரதா, கனிமொழி, லாவண்யா, பவித்ரா, அகஸ்தியா மற்றும் கா்ப்பிணிப் பெண்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொடண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.