திருவண்ணாமலை

12 பழங்குடியினருக்கு வீடு கட்ட ஆணை

சேத்துப்பட்டில் நீண்ட காலமாக குடியிருக்கும் 12 பழங்குடியினருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் வியாழக்கிழமை வழங்கினாா்.

DIN

சேத்துப்பட்டில் நீண்ட காலமாக குடியிருக்கும் 12 பழங்குடியினருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கண்ணனூா் அம்பேத்கா் நகரில் 12 பழங்குடியின சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா்கள், தங்களுக்கு இலவசமாக வீடு வழங்குமாறு மனு கொடுத்து பல ஆண்டுகளாக காத்திருந்தனா்.

தற்போதைய திமுக ஆட்சியில் மனு மீது அரசு நடவடிக்கை எடுத்து பழங்குடியினா் நல திட்ட அலுவலா் செந்தில்குமாா் பயனாளிகளை நேரில் அழைத்து வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா் (படம்).

பழங்குடி மக்கள் ஒருங்கிணைப்பாளா் பழனி, மாவட்ட துணைத் தலைவா் அய்யனாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT