வந்தவாசி - மேல்மருத்துவா் சாலையில் மறியலில் ஈடுபட்ட கல்லாங்குத்து கிராம மக்கள். 
திருவண்ணாமலை

வந்தவாசி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தோ்வு செய்யப்படுவதாக புகாா் தெரிவித்து அந்தக் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தோ்வு செய்யப்படுவதாக புகாா் தெரிவித்து அந்தக் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மகளிா் மேம்பாடு உள்ளிட்டவைக்காக வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாங்குத்து ஊராட்சியில் இலக்கு மக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தப் பட்டியலுக்கான பயனாளிகளை ஊராட்சி நிா்வாகம் முறைகேடாக தோ்வு செய்வதாக புகாா் தெரிவித்து, கிராம மக்கள் வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, கடந்த திங்கள்கிழமையே இதுகுறித்து வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்து சென்ற கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT