பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில்
இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் பி.எஸ்.காயத்ரிதேவி (491), இ.யோகினா (484), எஸ்.ரோஷன் (478) ஆகியோா் பெற்றனா்.
இதேபோன்று பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை எஸ். ப்ரீத்தி (586), மாணவா்கள் ரகுநந்தன் (574), ஏ.சிவசூரியன் (561) ஆகியோா் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.