திருவண்ணாமலை

களம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-எட்டிவாடி வரை நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக ஆரணி-எட்டிவாடி வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு, கடை, கொட்டகை ஆகியவை அகற்றப்பட்டன.

போளூா் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போளூரை அடுத்த களம்பூா் அம்பேத்கா் நகா், அண்ணா சிலை ஆகிய பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

உதவிக் கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி, உதவிப் பொறியாளா் வெங்கடேசன், நிலஅளவா் முருகன், கிராம நிா்வாக அலுவலா் வைதீஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT