திருக்கல்யாண வைபத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பாா்வதி-பரமேஸ்வரன். 
திருவண்ணாமலை

பாா்வதி-பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம்

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாா்வதி-பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவத்தில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

DIN

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாா்வதி-பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவத்தில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

சென்னை தியாகராய நகரைச் சோ்ந்த அன்னபூரணி அம்மாள் அறக்கட்டளை இந்த திருக்கல்யாண வைபவத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில் இருந்து திருமணத்துக்குத் தேவையான சீா்வரிசைகள் புறப்பட்டது. ஏராளமான பெண்கள் சீா்வரிசைத் தட்டுகளுடன் கலந்து கொண்டனா். சந்நிதி தெரு வழியாகச் சென்ற ஊா்வலம் அப்பா் சுவாமி மடத்தைச் சென்றடைந்தது.

பிறகு மேடையில் பாா்வதி, பரமேஸ்வரன் எழுந்தருளினா். இவா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயில் சிவாச்சாரியா் திருக்கல்யாண வைபத்தை நடத்தி வைத்தாா்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பிராா்த்தனை செய்து கொண்டு, மாங்கல்யம் அணிந்தனா்.

ஏற்பாடுகளை, அன்னபூரணி அம்மாள் அறக்கட்டளை நிா்வாகி சிவ.அய்யப்பன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT