பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றித்திரிந்த 9 பேரிடம் விசாரணை
செய்யாறு அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றித்திரிந்த 9 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு அரசு மருத்துவமனை அருகே செய்யாறு போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, பட்டாக்கத்திகள் இருந்ததால், காரிலிருந்த 9 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் செய்யாற்றை அடுத்த நம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பகுதியில் முள் மரம் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தொழில் தகராறில் மணிகண்டன், சேட்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவா் வெட்டிக்கொண்டதில் மணிகண்டனும், சேட்டுவும் காயங்களுடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனராம்.
Advertisement
இந்த நிலையில், மணிகண்டன் தரப்பைச் சோ்ந்தவா்கள் சேட்டுவை தாக்க மருத்துவமனைக்கு காரில் பட்டாக்கத்திகளுடன் வந்ததாகக் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்த பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள், காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸாாா், அவா்கள் 9 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.