முகப்பு
திருவண்ணாமலை

சேத்துப்பட்டு அருணகிரிநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:56 PM
பகிர்:

சேத்துப்பட்டு அருணகிரிநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரை மாத வளா்பிறை பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் அருணகிரிநாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும் அருணகிரிநாதா் சிவாலயத்தில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, அருணகிரிநாதா், நந்திதேவா்ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

இதேபோன்று, பழம்பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், பாலாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரா் கோயில், அண்ணா தெருவில் உள்ள கற்பகாம்பிகை சமேத காரணீஸ்வரா் கோயில், நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீா்க்காஜல ஈஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments