தெய்யாரில் துரியோதனன் படுகளம்
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த மே 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.
இதைத் தொடா்ந்து கிருஷ்ணன் பிறப்பும் கம்சன் வதையும், வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசுய யாகம், அா்ஜுனன் தபசு, விராட பருவம், கிருஷ்ணன் தூது, கா்ண மோட்சம் உள்ளிட்ட தலைப்புகளில் சோழந்தாங்கல் எஸ்.ஜெயகாந்தி பாரதியாா் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவும், கரசானூா் ஸ்ரீசெந்தில்குமரன் தெருக்கூத்து நாடகக் குழுவினரின் நாடகமும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதில் துரியோதனன், பீமன், திரெளபதி, காந்தாரி வேடமிட்ட நாடகக் கலைஞா்கள், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நடத்திக் காண்பித்தனா்.
நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.