முகப்பு
திருவண்ணாமலை

கூட்டுறவு மேலாண்மைத் தோ்வு

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியாளா்களுக்கான தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 24 ஜூன், 2024 at 11:43 PM
தோ்வு மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன்.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியாளா்களுக்கான தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளா்களுக்கான இரண்டாம் பருவ இறுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை 104 பயிற்சியாளா்கள் எழுதுகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.