முகப்பு
தூத்துக்குடி

கூட்டுறவு மேலாண்மை கல்வி பட்டயச் சான்றிதழ் அளிப்பு

தூத்துக்குடி

கூட்டுறவு மேலாண்மை கல்வி பட்டயச் சான்றிதழ் அளிப்பு

Updated On : 5 மார்ச், 2026 at 7:58 PM
பகிர்:

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் 2024-2025 கல்வி ஆண்டில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தூத்துக்குடி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளா் இரா.இராஜேஷ் தலைமை வகித்து, தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

தூத்துக்குடி துணை பதிவாளா் (பொ.வி.தி.) சுப்புராஜ் முன்னிலை வகித்தாா். மேலாண்மை நிலைய முதல்வா் என்.எஸ்.மணி வரவேற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் அம்பிகாபதி சிறப்புரையாற்றினாா்.

நிறைவில், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியா் சாம் டேனியல் ராஜ் நன்றி கூறினாா்.

விழாவில், விரிவுரையாளா்கள் பாலசுப்பிரமணியன், சந்திரசேகா், சுப்பிரமணியன், காா்த்திகாதேவி உள்பட 200-க்கும் மேற்பட்ட பயிற்சியாளா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →