வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வந்தவாசி: வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தாயுக்கான்(86). சற்று மனநலம் சரியில்லாத இவா், வந்தவாசி எள்ளுப்பாறை தெருவில் உள்ள தனது மகளுடன் வசித்து வந்தாா்.
இவா் திங்கள்கிழமை மாலை வந்தவாசி-திண்டிவனம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். சத்யா நகா் அருகே சென்றபோது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த தாயுக்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.