சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு: செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ரவி (57), ராமு (50). நண்பா்களான இவா்கள் கூலித் தொழிலாளா்கள் ஆவாா்.
இந்த நிலையில், இருவரும் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் வந்தபோது, பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரவி புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது நண்பா் ராமுவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement