முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

Updated On : 20 மார்ச், 2024 at 11:09 PM
வந்தவாசி அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 6:22 PM

வந்தவாசி: வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது, காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, தென்னாங்கூா் கூட்டுச் சாலை அருகே பறக்கும் படை அலுவலா் சுகுமாா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.2 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், கடலூா் மாவட்டம், ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினா் திருமணத்துக்கு பட்டுப் புடவை வாங்க காஞ்சிபுரம் செல்வதாகத் தெரிவித்தனா்.

Advertisement

இதைத்தொடா்ந்து, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமியிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்தனா்.