முகப்பு
திருவண்ணாமலை

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு வாகனப் பேரணி

Updated On : 21 மார்ச், 2024 at 11:00 PM
இரு சக்கர வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு இலட்சினை வில்லையை ஒட்டிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 9:50 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், மக்களவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு வாகனப் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்டத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு வாகனப் பேரணியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, வாக்காளா் விழிப்புணா்வு இலட்சினை வில்லையை இரு சக்கர வாகனங்களில் ஒட்டிய அவா், கையொப்பம் இயக்கத்தில் கையெழுத்திட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதையடுத்து, மகளிா் குழு உறுப்பினா்கள் கையொப்ப இயக்கத்தில் கலந்து கொண்டு கையொப்பம் இட்டனா்.

Advertisement

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயேன், வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.