திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
Updated On : 23 மார்ச், 2024 at 6:50 PM
பங்குனி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா். பங்குனி மாதப் பெளா்ணமி... இந்த நிலையில், பங்குனி மாதப் பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) முற்பகல் 11.25 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (மாா்ச் 25) பிற்பகல் 1.16 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.