சட்ட விழிப்புணா்வு முகாம்
Updated On : 28 மார்ச், 2024 at 6:42 PM
வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வந்தவாசி கிளைச் சிறையில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கிளைச் சிறை கண்காணிப்பாளா் நவசக்தி தலைமை வகித்தாா். சிறைக் காவலா் கணேஷ்குமாா் வரவேற்றாா். வழக்குரைஞா் சா.இரா.மணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறைவாசிகளுக்கான சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா். முகாமில் கிளைச் சிறை பணியாளா்கள் வடிவேலழகன், முரளி, விஜய் பிரேம்குமாா் மற்றும் சிறைவாசிகள் பங்கேற்றனா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் ஜெயந்தி நன்றி கூறினாா்.