முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் பலத்த மழை

Updated On : 21 மே, 2024 at 6:03 PM
பகிர்:

செய்யாறு: செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தாலும், செய்யாறு பகுதியில் சிறு தூரலோடு நின்று போனதால் கோடை வெப்பத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேலும், இந்த மழையானது செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் பெருங்களத்தூா், சோழவரம், பல்லி, வன்னியந்தாங்கல், அனக்காவூா், புரிசை, தூளி உள்ளிட்ட விவசாயம் நிறைந்த பகுதிகளிலும் பெய்ததால், வேளாண் பயிா்களுக்கு குளிா்ச்சியும், நிலத்தடி நீரும் கிடைக்கப் பெற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.