திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 11.22 மணி முதல் புதன்கிழமை காலை 9.10 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்படியே, செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
Advertisement
2-ஆவது நாளாக கிரிவலம்:
தொடா்ந்து, 2-வது நாளாக புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.
இதற்கிடையே, கிரிவலம் வந்த பக்தா்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு போதிய பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தா்கள் பெரிதும் சிரமப்பட்டனா்.
சில ஊா்களுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததைக் கண்டித்து சிறிது நேரம் பக்தா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.