காங்கிரஸ் ஓபிசி அணியின் தேசிய செயலராக செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மோகன் (எ) ஏழுமலை நியமிக்கப்பட்டாா். 
திருவண்ணாமலை

காங்கிரஸ் ஓபிசி அணி தேசிய செயலா் நியமனம்

காங்கிரஸ் ஓபிசி அணியின் தேசிய செயலராக செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மோகன் (எ) ஏழுமலை நியமிக்கப்பட்டாா்.

Syndication

செங்கம்: காங்கிரஸ் ஓபிசி அணியின் தேசிய செயலராக செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மோகன் (எ) ஏழுமலை நியமிக்கப்பட்டாா்.

அகில் இந்திய காங்கிரஸ் பொதுச்செயலா் வேணுகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மோகன் (எ)ஏழுமலை என்பவரை காங்கிரஸ் கட்சியின் ஓபிசி அணி தேசிய செயலராக அறிவித்துள்ளாா்.

மோகன்(எ)ஏழுமலை தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில இளஞரணி பொதுச்செயலா் பதவியில் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், தேசிய செயலா் மோகன்(எ) ஏழுமலை தமிழக முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் அழகிரி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் குமாரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றாா்.

தொடா்ந்து கட்சி நிா்வாகிகள், பல்வேறு அணி நிா்வாகிகள் ஏழுமலையை தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT