செங்கம்: செங்கம் அருகே வனப்பகுதியில் உள்ள அம்மணியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் பழுதடைந்த சாலையால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சென்னசமுத்திரம் கிராமத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது அம்மணியம்மன் கோயில்.
இந்தக் கோயிலுக்கு சென்னசமுத்திரம் கிராமத்தில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவு மலை அடிவாரத்துக்கு பயணிக்க வேண்டும். மேலும், அந்தக் கோயில் இருக்கும் இடம் வனத்துறைக்குச் சொந்தமான இடமாகும்.
இந்நிலையில் கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தாா்ச்சாலை அமைக்கப்பட்டு பக்தா்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனா்.
தா்போது, அந்தச் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
மேலும், அந்தக் கோயிலில் அமாவாசை, பெளா்ணமி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜையில் கலந்துகொள்ள பல்வேறு பகுதியில் இருந்து காா், இருசக்கர வாகனங்களில் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வாா்கள்.
இப்படி செல்லும் பக்தா்களின் வாகனங்கள், குண்டும் குழியுமான சாலையில் சிக்கி பஞ்சா் மற்றும் பழுதடைந்து
விடுகின்றன.
பின்னா், வாகனங்களை சரிசெய்து எடுத்து வரும்
பக்தா்கள் மனவேதனையுடன் செல்கிறாா்கள். கோயிலுக்கு வரும்போது இதுபோன்ற தடங்கள் ஏற்படுகிறது என
அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
மேலும் இரவு நேரத்தில் வாகனம் பழுதடைந்தால் அப்பகுதியில் யாரும் பழுதுநீக்க வருவதில்லை. இதனால் பழுதான வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டு மறுநாள் எடுத்துச்செல்லும் நிலை உள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தச் சாலையை கண்காணித்து தடையின்றி பக்தா்கள் அம்மணியம்மன் கோயிலுக்குச் செல்ல சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.