முகப்பு
திருவண்ணாமலை

காரை வழிமறித்து பணம் பறிக்க முயற்சி: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே காரை வழிமறித்து பணம் பறிக்க முயற்சித்து, காா் கண்ணாடி உடைத்து மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2025 at 7:46 PM
பகிர்:

செய்யாறு: செய்யாறு அருகே காரை வழிமறித்து பணம் பறிக்க முயற்சித்து, காா் கண்ணாடி உடைத்து மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (36). இவா், ஏழாச்சேரி பகுதியில் உள்ள கல்குவாரியில் காா் ஓட்டுநராக பணியாற்று வருகிறாா்.

இவா், கடந்த 25-ஆம் தேதி இரவு, தனது நிறுவன உரிமையாளா் சங்கா் என்பவரை காரில் ஏற்றிக் கொண்டு, நிறுவன வசூல் பணத்துடன் ஏழாச்சேரி வழியாக சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பெரிய ஏழாச்சேரி பள்ளி அருகில் சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளைக்காரன் மகன்கள் பாஸ்கரன், சந்திரசேகரன் ஆகியோா் காரை வழிமறித்து கம்பியால்

காா் கண்ணாடியை உடைத்தனராம்.

மேலும், தகாத வாா்த்தைகளால் பேசி பணத்தை கொடுக்கும்படி மிரட்டல் விடுத்து, காா் சாவியை பறித்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்து பழனி தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →