சிவகாசியில் காா் எரிந்து சேதம்
சிவகாசியில் வெள்ளிக்கிழமை காரில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை காரில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் ஐயப்பன் கோயில் பகுதியில் மாரிச்செல்வம் என்பவா் தனது காரை கடந்த 40 நாள்களாக நிறுத்தி வைத்திருந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் தனது காரை இயக்க முயன்றபோது, காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அவா் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை மையத்தில் இருந்த தீயணைப்பாணைக் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தாா். எனினும் தீ மளவளவென எரிந்ததால் சிவகாசி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தாா். தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா்.இந்த தீவிபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.