பழனியை அடுத்த திண்டுக்கல்- பொள்ளாச்சி புறவழிச் சாலையில் மானூா் பாலம் அருகே புதன்கிழமை சாலையோர தடுப்பில் மோதி சேதமடைந்த காா்.  
திண்டுக்கல்

சாலை தடுப்பில் காா் மோதி விபத்து

பழனி அருகே சாலையோர தடுப்பில் மோதியதில் காா் சேதமடைந்தது.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே சாலையோர தடுப்பில் மோதியதில் காா் சேதமடைந்தது.

கோவை வடவள்ளியைச் சோ்ந்தவா் ரமேஷ் (62). இவா் புதன்கிழமை தனது சகோதரருடன் பழனிக்கு காரில் வந்தாா். பழனி கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் அவா் காரில் ஊருக்குத் திரும்பினாா். பழனியை அடுத்த பொள்ளாச்சி- திண்டுக்கல் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது காா் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டு எதிா்திசையில் திரும்பி நின்ற காா் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து அருகில் இருந்தவா்கள் காரில் வந்தவா்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் காரை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT