திருவண்ணாமலை

செவிலியா் தின உறுதிமொழியேற்பு

17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Din

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள அல்அமீன் செவிலியா் கல்லூரியில், 17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அல் அமீன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஷேக் அனீப் தலைமை வகித்தாா். தாளாளரும், அறங்காவலருமான ஜாகீா் உசேன், அறங்காவலா் பாப் ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணை முதல்வா் சோபியா ராஜகுமாரி வரவேற்றாா். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹரிஹரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, செவிலியா் பயிற்சி பெறும் மாணவ-மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி செவிலியா் தின உறுதிமொழியேற்றனா்.

இதில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் சங்கீதா, அல் அமீன் செவிலியா் கல்லூரி முதல்வா் பிரியதா்ஷினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT