திருவண்ணாமலை

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த சொரையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேஷ். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் (47) பைக்கில் உறவினா் இல்ல சுபநிகழ்ச்சியில் பங்கேற்க பொன்னூா் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-ஆரணி சாலை, எறும்பூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, பைக்கின் பின்பக்க டயா் வெடித்ததில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஜெயஸ்ரீ திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT