திருவண்ணாமலை

ஆகாரம் காமராஜ் நகரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

ஆரணியை அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமென்ட் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆரணியை அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமென்ட் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

ஆகாரம் காமராஜா் நகரில் ரூ.8.5 லட்சத்தில் சிமென்ட் சாலை போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஆட்சேபனை தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் 20-க்கும் மேற்பட்டோா் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று சிமென்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தனா்.

மேலும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். அதிகாரிகள் தரப்பில் சிமென்ட் சாலையை விரைந்து முடிக்க உறுதியளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா!

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

SCROLL FOR NEXT