திருவண்ணாமலை

கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

வந்தவாசி அருகே கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

Syndication

வந்தவாசி அருகே கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி காவல் நிலையம் அருகே புதன்கிழமை மாலை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், அந்த கன்டெய்னா் லாரியில் 2 மூட்டைகளில் மொத்தம் 5 கிலோ கஞ்சா கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சா மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், லாரியை ஓட்டி வந்த கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (36) என்பவரை கைது செய்தனா்.

போலீஸ் விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

கடையநல்லூா் அருகே நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

SCROLL FOR NEXT