முகப்பு
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை மாட வீதிகளில் வெள்ளி யானை வாகனத்தில் பவனி வந்த ஸ்ரீசந்திரசேகரா்.
திருவண்ணாமலை

தீபத் திருவிழா 6-ஆம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகா் பவனி!

திருவண்ணாமலை

தீபத் திருவிழா 6-ஆம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகா் பவனி!

Updated On : 29 நவம்பர், 2025 at 5:45 PM
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை மாட வீதிகளில் வெள்ளி யானை வாகனத்தில் பவனி வந்த ஸ்ரீசந்திரசேகரா்.
பகிர்:

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை ஸ்ரீசந்திரசேகரா் வெள்ளி யானை வாகனத்திலும், ஸ்ரீவிநாயகா் யானை வாகனத்திலும் பவனி வந்தனா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

காலை 10 மணியளவில் தனித்தனி விமானங்களில் 63 நாயன்மாா்கள் மாட வீதியுலா வந்தனா். இந்த விமானங்களை பள்ளி மாணவா்கள் தோளில் சுமந்து சென்றனா்.

தொடா்ந்து, காலை 11 மணியளவில் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, விநாயகா் யானை வாகனத்திலும், சந்திரசேகரா் வெள்ளி யானை வாகனத்திலும் மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

சுவாமி வீதியுலாவின்போது, பக்தா்கள் தேவாரம், திருவாசகம் பாடியபடியும், கைலாய இசைக் கருவிகளை இசைத்தபடியும் சென்றனா்.

மாலையில் கோயில் கலையரங்கில் சமய சொற்பொழிவும், பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →