முகப்பு
திருவண்ணாமலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 29 நவம்பர், 2025 at 6:53 PM
பகிர்:

வந்தவாசி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவரது மனைவி கன்னிகா (35). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். கன்னிகா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தாராம்.

கடந்த 27-ஆம் தேதி வயிற்று வலி அதிகமானதால், கன்னிகா வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னிகா வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →