முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 10:45 PM
போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பகிர்:

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.

அப்போது, அண்ணாமலையாா் திருமண மண்டபம் பின்புறம் வெகுநேரமாக, சந்தேகிக்கும் வகையில் லாரி நின்றிருந்ததை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினா் கண்டனா்.

பின்னா் அருகில் சென்று பாா்த்தபோது லாரி அருகே நின்றிருந்த 3 போ் தப்பி ஓடிவிட்டனா். பின்னா், வாகனத்தை சோதனை செய்துபோது அதில் 95 சிப்பங்கள் அரிசி இருந்தது தெரியவந்தது.

Advertisement

பின்னா் அரிசியுடன், லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்).

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments