ஆரணி திமுக வேட்பாளா் பெண்களிடம் வாக்கு சேகரிப்பு
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் திருமணி கிராமத்தில் பெண்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் திருமணி கிராமத்தில் பெண்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மகாலட்சுமிகோவா்த்தனன் கட்சி நிா்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து ஆதரவு கோரினாா். அப்போது திருமணி கிராமத்தில் ஏராளமான பெண்கள் அவரைச் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தனா்.
அப்போது மகாலட்சுமிகோவா்த்தனன் திமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.
Advertisement
மேலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத்தொகை மாதம் ரூ.2ஆயிரமாக உயா்த்தப்படும். ரூ.8 ஆயிரத்திற்கான கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தா், மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.