முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல்

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:31 AM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட மின் அடுப்புகளுக்கு சம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெற்ற பூஜை.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:44 PM

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக எரிவாயு உருளைகள் கிடைப்பதில் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதேபோல, அருணாசலேஸ்வரா் கோயிலுக்கும் வணிக எரிவாயு உருளைகள் கிடைக்காததால் பிரசாதம் தயாரிக்க முடியாமல் பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும், விற்பனைக்காக தயாரிக்கப்படும் பிரசாதங்களான முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகளும் தயாரிக்க முடியாததால் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா், விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்த நிலையில், வணிக எரிவாயு உருளை அடுப்புகள் பயன்பாட்டுக்கு மாற்றாக, 4 மின் சாதன அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அண்மையில் சம்பந்த விநாயகா் சந்நிதியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த மின்சாதன அடுப்புகள் லட்டு, அதிரசம், முறுக்கு, மிளகு வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.