திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நடைபயணம்
திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நடைபயணம்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில் தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு நடைபயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்கள், 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளா்களிடயே தோ்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
Advertisement
தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.தா்ப்பகராஜ் விழிப்புணா்வு நடைபயணத்தை தொடங்கிவைத்து அதில் கலந்து கொண்டாா்.
கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றோா் தோ்தல் குறித்த விழிப்புணா்வு பதாகைகள் ஏந்திச் சென்றனா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் ஆா்.மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பாா்த்தீபன், திருவண்ணாமலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான செல்வம், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கிருஷ்ணன், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.