முகப்பு
கடலூர்

தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடங்கிவைப்பு

Updated On : 11 மார்ச், 2026 at 6:34 PM
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கையொப்ப இயக்கத்தைத் தொடங்கிவைத்த மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2026 சட்டப் பேரவைத் தோ்தல் 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து, தற்படம் எடுத்துக்கொண்டாா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழி இன்றைய தினம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, கையொப்ப இயக்கத்தை கையொப்பம் இட்டு தொடங்கிவைத்தாா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக பிரதான வாயிலில் வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தற்பட பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், உறுதிமொழி ஏற்றல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →