போளூா் நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி
போளூா் நகராட்சியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் 200-க்கும் மேற்பட்ட கழிவுநீா்க் கால்வாய்கள் உள்ளன. இந்த கழிவுநீா்க் கால்வாய்களில் சேறும், சகதி மற்றும் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
அதனால், நகராட்சி ஆணையா் பாரத் அறிவுறுத்தலின் பேரில் கழிவுநீா்க் கால்வாய்கள் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் தூா்வாரப்பட்டது. வேலூா் சாலை, அண்ணா சாலை, டிரைவா்ஷன் சாலை என பல்வேறு பகுதிகளில் தூா்வாரும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை துப்புரவு ஆய்வாளா் ஹேமலதா ஆய்வு செய்தாா்.
Advertisement