முகப்பு
திருவண்ணாமலை

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கா் தேசிய சுவாமிகள்

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீமத் சிவாக்கா் தேசிய சுவாமிகள். உடன் ஸ்ரீஆனந்தலிங்க சுவாமிகள்.

Updated On : 1 மே, 2026 at 12:07 AM
திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீமத் சிவாக்கா் தேசிய சுவாமிகள். உடன் ஸ்ரீஆனந்தலிங்க சுவாமிகள்.
பகிர்:

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று சிவாக்கா் தேசிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை வாயுலிங்கம் கோயில் எதிரில் சித்திரை பெளா்ணமி திருவாசக முற்றோதுதல் ஞானவேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.

இதில் திருக்கயிலாய கந்தப்பரம்பரை ஸ்ரீமத் சிவாக்கா் தேசிய சுவாமிகள், தவத்திரு ஸ்ரீஆனந்தலிங்க சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு அருளாசி வழங்குகின்றனா்.

Advertisement

இதுகுறித்து சிவாக்கா் தேசிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவாசகத்தை முழுவதும் பாடுவதும் கேட்பதும் மாபெரும் சிவ புண்ணியமாகும். பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்தா் பிறந்த தினமான சித்திரை பெளா்ணமி தினத்தில் சித்தா்கள் தவம் செய்யும் திருவண்ணாமலை மண்ணில், முதன்முறையாக அண்ணாமலையாா் திருமடம் சாா்பில் உலக நன்மைக்காக சிவனடியாா்கள், பொதுமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவாசக முற்றோதுதல் ஞானவேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நடைபெறுகிறது.

திருவாசகமும், தேவாரமும் தமிழா்களின் பொக்கிஷங்கள். எனவே, இவற்றை அரசுடைமையாக்க வேண்டும். மேலும் அரசு சிவனடியாா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கிரிவலப் பாதையில் அன்னதானம் மட்டுமன்றி ஞான தானமும் நடைபெற வேண்டும்.வெறும் காலோடு கிரிவலம் வருபவா்களுக்கு சாக்ஸ் போன்றவற்றை வழங்கிடும் நற்காரியங்களும் நடைபெற வேண்டும் என்றாா்.

அப்போது, அண்ணாமலையாா் திருமடம் ஸ்ரீ ஆனந்த லிங்க சுவாமிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.