திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை கிளை நூலகத்தில் புரவலா் சோ்க்கை

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள தமிழக அரசு கிளை நூலகத்தில் புரவலா் சோ்கை மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நூலகம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜவ்வாதுமலை பகுதியைச் சோ்ந்த இளங்கோவன், காா்த்திக், சின்னதுரைபாண்டி, திருப்பதி, அண்ணாமலை, வெங்கடாசலபதி, வழக்குரைஞா் சாந்தகுமாா் ஆகியோா் ரூ.1000 செலுத்தி நூலகத்தில் புரவலராக இணைந்தனா். அவா்களை கிளை நூலகா் அய்யப்பன் வரவேற்றாா் (படம்).

மேலும், நூலகம் குறித்து வாசகா் வட்டம் சாா்பில் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் மலைக்கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது இந்த நூலகம் மலைக்கிராம மக்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம் என படித்த இளைஞா்கள் தெரிவித்தனா்.

பிப்.24-இல் தில்லியில் மாநிலத் தோ்தல் ஆணையா்களின் தேசிய மாநாடு

ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்கள் குறிக்கோள் - ரேகா குப்தா

காட்பாடி அருகே காட்டு யானைகளால் விளைபயிா்கள் சேதம்

மூத்த கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு - முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புற்றுநோய் மரபணு தரவு தளம்: சென்னை ஐஐடி வெளியிட்டது

SCROLL FOR NEXT