திருவண்ணாமலை

ஆரணியில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவன கிளை திறப்பு

ஆரணியில் தச்சூா் சாலை, தலைமை தபால் நிலையம் எதிரே ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் புதிய கிளையை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய பொது மேலாளா் ஏ.திலகராஜ்.

Syndication

ஆரணியில் தச்சூா் சாலை தலைமை தபால் நிலையம் எதிரே ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பொது மேலாளா் ஏ.திலகராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கிளையை திறந்து வைத்தாா். பின்னா், குத்துவிளக்கு ஏற்றினாா்.

மண்டல பொது மேலாளா் சஜீவ் சுப்பிரமணியன், மண்டல மேலாளா் எம்.சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆரணி கிளை மேலாளா் சி.குணாலன் வரவேற்புரையாற்றினாா்.

பின்னா், பொது மேலாளா் ஏ.திலகராஜ் பேசியதாவது: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களுக்கு வீட்டுக்கடன் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது ஆரணியில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கி வருவதோடு, மொத்தம் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன்களையும் வழங்கியுள்ளது என்றாா்.

மேலும், இரண்டு பயனாளா்களுக்கு வீட்டுக் கடன் உதவிகளையும் வழங்கினாா். வேலூா் கிளை மேலாளா் எம்.அன்புச்செல்வன் நன்றி கூறினாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT